திருநாவுக்கரசர்:
31 ஆண்டுகால சட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கருணை அடிப்படையில் இல்லாமல், சட்டத்தின் மூலமாக நிவாரணம் பெறப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் நாடு போற்றும் தலைவர் என்பதால், கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தால் அது தவறான முன்னுதாரணமாக இருந்திருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உச்சநீதிமன்றத் தீர்ப்பால், சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ நிச்சயமாக வருத்தப்படமாட்டார்கள் என நம்புகிறேன். ராகுல்காந்தியை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும். பேரறிவாளன் விடுவிக்கப்படக் கூடாது என்று ராகுல் சொன்னதில்லை. பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுவிட்டார். இனி அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அவரது தாய் அற்புதம்மாளும் மகிழ்ச்சி அடைவார்கள்.
அண்ணாமலை:
பேரறிவாளனை உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமைப்புச் சட்டம் 142ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழ்நாடு பாஜக ஏற்றுக்கொள்கிறது.
நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனமதிக்காது என்றும் நம்புகிறோம்.