இளம்பெண்ணை ஏமாற்றி அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பிய ஆன்லைன் சர்வீஸ் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 28). இவர் கொளத்தூர் பகுதியில் ஆன்லைன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் இளம்பெண் ஒருவர் ஒன்றரை ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணின் கணவருக்கு சரியான வேலை இல்லாததை பயன்படுத்தி கொண்ட அருணாச்சலம், குடும்பத்தை தான் பார்த்து கொள்வதாக ஆசைவார்த்தி கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அந்த பெண்ணுடன் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். காலப்போக்கில் அருணாச்சலத்தின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே, அவரை விட்டு பிரிய முடிவெடுத்த அந்த இளம் பெண் வேலைக்கு வருவதை நிறுத்தி கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் அந்த பெண்ணை மீண்டும் வேலைக்கு வரும்படி வற்புறுத்தியதோடு, அவரை மிரட்டியுள்ளார்.
இதற்கு அந்த பெண் இடம் கொடுக்காததால், அவருடன் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை இளம்பெண்ணின் கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார் அருணாச்சலம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது குறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அருணாச்சலத்தை கைது செய்தனர். மேலும் வேறு ஏதும் பெண்களை இதுபோன்று வீடியோ எடுத்துள்ளாரா? என்றும், அவரது கைப்பேசி மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்லும் பெண்கள் இவ்வாறு மனிதாபிமானமற்ற ஆண்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சூழ்நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தைரியாக செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
– இரா.நம்பிராஜன்