தமிழகம்

கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!

கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்த வந்த சிறுத்தை பிடிபட்டது.  

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.  இந்த நிலையில்,  கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதி தேவன் எஸ்டேட் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.  இதனைத் தொடர்ந்து,  வனத்துறையினர் அந்தப் பகுதியில் தேடுதல் பணியை தொடங்கினர்.  அடுத்த முயற்சியாக வனத்துறையினர் அந்தப் பகுதியில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.  இந்த நிலையில்,  சிறுத்தை இன்று காலை கூண்டில் சிக்கியது.  சிறுத்தை பிடிப்பட்டதையடுத்து,  முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  மருத்துவர் வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் உயர்வு

EZHILARASAN D

மாவட்டச் செயலாளர் தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு என்ன ?

Web Editor

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்: கட்டுப்பாடுகள் முழு விவரம்!

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading