33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் வாகனம்

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்திய முன்னணி; யூபிஐ செயலி கடந்து வந்த பாதை


ரா.தங்கபாண்டியன்

இந்திய அரசின் யூபிஐ செயலி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அத்துடன் டிஜிட்டல் சந்தையிலும் முன்னணியில் உள்ள யூபிஐ கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ,பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிதியியலில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்காக வங்கிகள் வழங்கும் வரைவோலை, பண ஆணை போன்ற பணவியல் சான்றுகளுக்கு மாற்றாக , டிஜிட்டல் வடிவில் பண பரிமாற்றம் செய்ய இந்திய அரசு நிறுவனம் ஒன்றை அமைக்க வேண்டும் என நிதியமைச்சகத்திற்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் 2008 ம் ஆண்டு , இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டாண்மையில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து , நேசனல் ஃபேமண்ட் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா என அழைக்கப்படும்,தேசிய பரிவர்த்தனை கழகம் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிறுவனம் தற்போது நிதிசார் தளத்தில் பல செயலிகளை உருவாக்கி உள்ளது.அதில் ஒன்று தான் யூபிஐ . பிரதமர் நரேந்திர மோடி, 2016 ஆம் ஆண்டு, பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்த போது டிஜிட்டல் பண பரிமாற்றங்களை அதிக அளவில் கையாள யூபிஐ தளம் , தன் பயணத்தை ஆரம்பித்தது. இன்று குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துள்ளது யூபிஐ. சென்ற செப்டம்பர் மாதம் மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு யூபிஐ செயலியில் பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. வங்கிகள் வழங்கும் ஏடிஎம், கிரெடிட் கார்டுகளிலும் யூபிஐ பயன்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் இணையவழியில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் சிரமம் ஏற்பட்ட போதிலும் தற்போது அனைவரின் பயன்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது.இந்நிலையில் தேசிய பரிவர்த்தனை கழகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் கையாளப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு, செப்டம்பரில் 3 சதவீதம் அதிகரித்து, 11 லட்சத்து ,16 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. யூபிஐ கடந்து வந்த பாதையை பின்னோக்கி பார்க்கலாம்.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 38 லட்சம் ரூபாய் யுபிஐ வழியே பண பரிமாற்றம் நடைபெற்றது.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 கோடியே 9 லட்சமும், பண மதிப்பிழப்பை அறிவித்த பின் நவம்பர் மாதம் 10 கோடி ரூபாய் , 2017 ம் ஆண்டு ஜனவரி 1696 கோடி ரூபாய், 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் 15 ஆயிரத்து ,571 கோடி ரூபாய் , 2019 ம் ஆண்டு ஜனவரியில் ஒரு லட்சத்து, 9 ஆயிரத்து ,932 கோடி ரூபாய், 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் , இரண்டு லட்சத்து,16 ஆயிரத்து 242 கோடி ரூபாய்,2021 ஆம் ஆண்டு ,4 லட்சத்து,31 ஆயிரத்து, 181 கோடி ரூபாய், 2022 ஆம் ஆண்டு ஜனவரியில், எட்டு லட்சத்து, 31 ஆயிரத்து, 993 கொடி ரூபாய், ஆகஸ்டில் ,பத்து லட்சத்து,72 ஆயிரத்து, 792 கோடி ரூபாய் ,செப்டம்பரில் , பதினோரு லட்சத்து, 16 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மதிப்பில் பண வர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.  அதே சமயம் மொத்த பரிவர்த்தனைகளின் எண்னிக்கை 678 கோடி. யூபிஐ ந் இணைப்பில் உள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 358 ஆக உள்ளது.

பெருகி வரும் பொருளாதார செயல்பாடுகளால், டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் அளவும் சீராக அதிகரிக்கிறது.தற்சமயம் யூபிஐ பண பரிமாற்றத்தில் 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு முறை, பொதுத்துறை நிறுவனம் என்றால் அனைவருக்கும் பலனளிக்கும் ,பிரம்மாண்ட வளர்ச்சி என்பதை யூபிஐ செயலி நிரூபித்துள்ளது என்றால் மிகையில்லை

– ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading