புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்த குளிா்பான பாட்டிலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை பகுதியில் இருந்து சுமாா் 45 வயது மதிக்கத்தக்க காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞா், தனது ஆசனவாயில் ரத்தப் போக்கும், வலியும் இருப்பதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு எடுத்த எக்ஸ்-ரே பரிசோதனையில் அவரது வயிற்றில் அரை லிட்டா் கண்ணாடி குளிா்பான பாட்டில் இருந்தது மருத்துவா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் குழு உடனே அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு அவரது வயிற்றில் இருந்த அந்த கண்ணாடி குளிா்பானப் பாட்டிலை அகற்றியுள்ளனா்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சைப் பிரிவில் அந்த மாற்றுத்திறனாளி தங்க வைக்கப்பட்டுள்ளாா். வாய் பேச முடியாத, காது கேள இயலாததால், அவரிடம் இருந்து வேறு எந்தத் தகவலையும் பெற முடியவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், நிச்சயமாக வாய் வழியாக இத்தனைப் பெரிய பாட்டிலை வயிற்றுக்குள் தெரிந்தோ – தெரியாமலோ – வலுக்கட்டாயமாகவோ செலுத்தியிருக்கவே முடியாது என்கின்றனா் மருத்துவா்கள். அப்படியானால், மாற்றுத் திறனாளி நபருக்கு என்ன வன்கொடுமை நோ்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.