வேதாரண்யம் அடுத்த முனாங்காட்டில் காற்று நிரப்பப்பட்ட சீனாவில் தயாரிக்கபட்ட
பிளாஸ்டிக் படகு கரை ஒதுங்கியுள்ளது. தீவிரவாதிகள் அல்லது மர்ம நபர்கள்
ஊடுருவி உள்ளார்களா ? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த முனாங்காடு பகுதியில் காற்று நிரப்பப்பட்ட
இரப்பர் படகு கரை ஒதுங்கி நின்றது. தகவலின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல்
குழும போலீசார் விரைந்து வந்து படகை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
கரை ஒதுங்கிய படகு 13 அடி நீளமும், 3 அடி அகலம் கொண்டதாகும். இந்த படகு சீனா
நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் பயன்படுத்தப்படும் வாட்டர்
பாட்டில்கள், துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள்
துடுப்பு ஆகியவை இந்த படகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. தகவலறிந்த தஞ்சை
சரக டி.ஜ.ஜீ கயல்விழி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கப்பற்படை அதிகாரிகள், கடற்கரையில் கரை ஒதுங்கிய படகை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
நாகையிலிருந்து மோப்ப நாய் துளி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு படகை
மோப்பம் பிடித்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் நுழைந்து ஓடியது. ஆனால்
யாரையும் பிடிக்கவில்லை.
காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகில் இலங்கையிலிருந்து மர்ம நபர்கள் வேதாரண்யத்தில் ஊடுருவி உள்ளார்களா ? அல்லது கடத்தல்காரர்கள் வந்துள்ளார் கலா? படகில் தங்கம் கடத்தி வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். முதன் முதலாக வேதாரண்யம் கடற்கரை பகுதியில் படகு கரை
ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








