வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய வட்டாட்சியர் காளிமுத்து மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்