பீகார் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 9 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை, அங்குள்ள ஆழ்துளை கிணக்கில் தவறி விழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.
ஆழ்துளை கிணற்றில் 60 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருப்பது தெரிய வந்தது.
சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.