மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நேதாஜி சாலையில் 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது.
அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்
சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இங்கு ஹோட்டல், ஜிகர்தண்டா கடை, பழக்கடை உள்ளிட்ட 4 கடைகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்துள்ளது. கடை உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளை
சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை கீழ வெளி வீதி பகுதியில் ரோந்துப் பணியில்
ஈடுபட்டிருந்த காவலர் சரவணன் மீது சுமார் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம்
இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியிருந்த நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இன்று பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து ஏற்படும் நேரத்தில் மட்டும், அதிகாரிகள் பழமையான கட்டிடங்கள் நீக்கப்படும்
என எச்சரிக்கை விடுத்து செல்வதாகவும், தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி
நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கட்டட உறுதித் தன்மை குறித்து விசாரணை நடத்த
வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
-மணிகண்டன்







