ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரூ.6 கோடி வருமானம் – தெற்கு ரயில்வே தகவல்

ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரூ.6 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும், ஏழாவது ஆன்மீக சுற்றுலா ரயில் கூடல் நகரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி புறப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தியாவின் பண்பாடு,…

ஆன்மீக சுற்றுலா ரயில் மூலம் ரூ.6 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும், ஏழாவது ஆன்மீக சுற்றுலா ரயில் கூடல் நகரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி புறப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பண்பாடு, பாரம்பரிய மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை கண்டு களிக்க இந்திய ரயில்வே, பாரத் கவுரவ் திட்டத்தின் மூலம் ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் இதுவரை ஆறு ஆன்மீக சுற்றுலா ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வேக்கு 6.3 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் ஏழாவது ஆன்மீக சுற்றுலா ரயில், மதுரை கூடல் நகர்- பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் நிலையங்களிடையே இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா ரயில் தெலுங்கானா மௌலாளி, ஜெய்பூர், ஆக்ரா, அமிர்தசரஸ், கோவா போன்ற சுற்றுலா தலங்களை இணைத்து இயக்கப்படுகிறது.

கூடல் நகரில் இருந்து நவம்பர் 3ம் தேதி இரவு 07.40 மணிக்கு புறப்படும் இந்த சுற்றுலா ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக சென்று நவம்பர் 6ம் தேதியன்று மௌலாளி, நவம்பர் 8ஆம் தேதி அன்று ஜெய்ப்பூர், நவம்பர் 9ஆம் தேதி அன்று ஆக்ரா, நவம்பர் 10ஆம் தேதி அன்று டெல்லி, நவம்பர் 11ஆம் தேதி அன்று அமிர்தசரஸ், நவம்பர் 13ஆம் தேதி அன்று கோவா சென்றடையும். பின்பு மங்களூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக நவம்பர் 16ஆம் தேதி அன்று அதிகாலை 02.30 மணியளவில் கூடல் நகர் வந்து சேரும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.