33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

சோம்பேறியா நீங்கள்? – காரணம் இதுதாங்க…

படுக்கையில் இருந்து எழுந்திருக்கவும், ஒரு பணியை முடிக்கவும் தேவையான உந்துதல் இல்லாவிட்டால், அதற்கு உளவியல் காரணங்கள் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

எப்போதும் சோம்பேறியாக இருப்பது நல்லதல்ல. அது உங்கள் மீது உங்களை நம்பிக்கை இழக்க வைக்கும், உங்கள் செயல்திறனை பாதிக்கும், பிறருடனான உங்கள் உறவுகளை பாதிக்கும், மொத்தத்தில் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனவே, உங்கள் வாழ்க்கை முறையை ஆராய்வது அவசியம். அதோடு, உங்கள் தேர்வு, உங்கள் வழக்கம் ஆகியவற்றை மதிப்பிட்டு, உங்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நேர்மறை மாற்றங்களைச் செய்துகொள்வது முக்கியம்.

இதுபற்றி விவரிக்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர் சாந்தினி துக்னைட். ஒருவர் எப்போதும் சோம்பேறியாக இருப்பதற்கான 5 உளவியல் காரணங்களை அவர் பட்டியல் இட்டுள்ளார். அது குறித்து தற்போது பார்ப்போம்.

  1. நீங்கள் சலிப்படைய உங்கள் செயல்கள் காரணமாக இருக்கலாம்

குழப்பத்தில் சிக்கிக்கொண்டதாக உணர்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் சோம்பேறியாக உணரத் தொடங்குவதில் ஆச்சரியமில்லை. நாம் ஒரு சலிப்பான அல்லது குழப்பமான மனநிலையில் சிக்கிக் கொள்ளும்போது, நமது மூளை உண்மையில் மூடிக்கொள்ள தொடங்குகிறது. இதை எதிர்த்துப் போராட, உங்களின் வழக்கத்தை மாற்றவும், புதிய செயல்களை – அது மிகச் சிறியதாக இருந்தாலும் – செய்யவும் தொடங்குகள். இது உங்களை உற்சாகப்படுத்தும்; சலிப்பு மற்றும் சோம்பலைப் போக்கும்.

  1. முன்னுரிமைகள் குறித்த தெளிவின்மை சலிப்பைத் தரலாம்

நாம் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக முடிவெடுத்து செயல்பட முடியாத அளவுக்கு பல விஷயங்கள் நமது கவனத்தை சிதறடிக்கலாம். ஒரே நேரத்தில் நாம் செய்தாக வேண்டிய பல செயல்கள் நம்மை திணறடிக்கலாம். இது நம்மைச் சோம்பேறிக்க வல்லது. உங்கள் முன்னுரிமைகளின் பட்டியலை உருவாக்கி அவற்றை கவனமாக பின்பற்றுங்கள். இது ஒட்டுமொத்தமாக சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.

  1. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யாதீர்கள்

ஒரே நேரத்தில் நீங்கள் பல வேலைகளைச் செயய தொடர்ந்து முயல்கிறீர்கள் என்றால், நீங்கள் மன அழுத்தத்தை உணர ஆரம்பிக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்துவது முக்கியம். உங்கள் செயல்கள் மீது உங்களுக்கு திருப்தி ஏற்படவும், தொடர்ந்து செயல்களைச் செய்யவும் இது உந்துதலாக இருக்க உதவும்.

  1. போதுமான தூக்கம் இல்லையா

உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால், நீங்கள் சோம்பேறியாக உணர ஆரம்பிக்கலாம். நாம் சோர்வாக இருக்கும்போது, ​​​​நமது மூளையும் சோர்வாக இருக்கும். இரவில் போதுமான அளவு தூங்குவது முக்கியம். 7-8 மணிநேரம் உறங்கும் வழக்கத்தை உருவாக்குங்கள். பகலில் நீங்கள் அதிக ஆற்றலுடன் இருக்க இது உதவும்.

  1. உங்களுக்கு நீங்களே சவால் விடுகிறீர்களா?

புதிய விஷயங்களை முயற்சிப்பதில்லை; உங்களுக்கு நீங்களே சவால் விடுத்துக்கொள்வதில்லை என்றால், நீங்கள் சோம்பேறியாக உணரத் தொடங்கலாம். உங்களுக்கு நீங்களே சவால் விடுத்துக்கொள்வதற்கான வழிகளை ஆராயுங்கள். இது உத்வேகத்துடன் செயல்களில் ஈடுபட உதவும்.

நீங்கள் எப்பொழுதும் சோம்பேறியாக உணர்கிறீர்கள் என்றால், அதற்கான அடிப்படை உளவியல் காரணங்களை ஆராய்வதற்கு ஒரு மனநல நிபுணரிடம் பேசுவது முக்கியம். இந்தச் சிக்கல்களைத் தீர்க்கவும், வாழ்க்கையில் உந்துதலை பெறவும் உங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உங்களுக்கு உதவும்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading