30 C
Chennai
May 19, 2024
குற்றம் தமிழகம் செய்திகள்

காரைக்குடி அருகே திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் மீட்பு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.  இதன்  அடிப்படையில் 8 பேர் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல் உதவி கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட தனிப்படை பிரிவினர், வாகனங்கள் திருடப்பட்டதாக கூறப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டபோது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவர் அளித்த தகவலின்பேரில், 5 பேர் கூட்டாக சேர்ந்து சந்தை கூடும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை மாற்று சாவி போட்டு திருடி சென்றது தெரிய வந்தது.

பின்னா்  ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து மீட்கப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டதை அறிந்த வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

—ரூபி.கா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading