ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலால் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த போர் கடந்த 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் ரஷ்யாவிற்கு ஈடுகொடுத்து உக்ரைனும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், நாட்டின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கி உள்ளதாகவும் அவர் கூறினார். மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஈரானிடம் இருந்து அதிநவீன டிரோன்களை ரஷ்யா போரில் பயன்படுத்துவதற்காக வாங்கியது. உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த டிரோன்களை ரஷ்யா பயன்படுத்துகிறது ஈரானிடம் இருந்து வாங்கிய 300க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.