இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. மேலும் ஒருநாள் போட்டியில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் தீவிர முனைப்புடன் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. அதே நேரத்தில் இந்த போட்டியில் இந்தியா வெற்றில் பெற்றால் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றும். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது.