32.4 C
Chennai
May 13, 2024
இந்தியா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 2,800 பேர் புனித ஹஜ் பயணம் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 2,800 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். 

கடந்த ஜூன் 7ம் தேதி முதல் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளை சென்னை விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் வந்து வழி அனுப்பி வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து 260 பயணிகள் நேற்று ஹஜ் புனித பயணம் சென்றனர். அவர்களை வழியனுப்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

கடந்த ஜூன் 7ம் தேதி முதல் இன்று வரை 14 விமானங்களில் 2800 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். மேலும் இன்னும் 1200 பயணிகள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading