ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து 2500 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் விருப்பாட்சி அருகே
செந்தில்நாதன் என்பவர் கோழி பண்ணை அமைத்து விவசாயம் செய்து வருகிறார். இவர்
7 செட்டுக்கள் அமைத்து ஒவ்வொரு செட்டுக்களிலும் 2500 கோழி குஞ்சுகள்
வளர்த்து வருகிறார்.
இந்த கோழி குஞ்சுகள் வளர்வதற்கு முட்டை விட்ட 15 தினங்களுக்கு மண் சட்டியில் அடுப்பு கறி வைத்து அனல் உண்டாக்கி குஞ்சுகள் மிதமான வெப்பத்தில் இருக்கும் படி செய்வது வழக்கம். இந்நிலையில் அதேபோல் நேற்றும் செய்துள்ளனர். இதில் அந்த கரிக்கட்டையில் இருந்து வந்த தீ பிழம்புகள் கீழே இருந்த தென்ன மஞ்சியில் பட்டு தீ பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் அந்த கோழி செட்டில் இருந்த 2500 குஞ்சுகளும் எரிந்து கருகிப்போயின. அதன் பின் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த
தீயை அணைத்தனர்.
இதில் கோழி செட் மற்றும் குஞ்சுகளால் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் ஆயின.
ம. ஸ்ரீ மரகதம்







