கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு!

நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவக்குழுவினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்​பால் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த மாநில அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

கேரள மாநிலத்தில் ஆண்​டு​தோறும் கோழிக்கோடு,பாலக்​காடு,மலப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தொடர்ச்​சி​யாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.

இந்​நிலை​யில் பாலக்​காடு மாவட்​டம் மன்னார்​காடு பகு​தியை சேர்ந்த 57 வயது நபர் ஒரு​வர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அதன் விளைவாக தமிழகம் கேரளா எல்லைப் பகுதியான மதுக்கரை வட்டம் சோதனை சாவடியில் கோவை மாவட்ட சுகாதாரக் குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள்,லாரிகள்,நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பிறகு தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கேரளாவில் இருந்து வரக்கூடிய நபர்களை மாஸ்க் அணிந்து வருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.