முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்!

மும்பையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.98 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 137 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இலங்கை வாலிபர் கைது செய்தனர். 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மும்பையில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது இலங்கையை சேர்ந்த முகமது இம்ரான் (28) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் ரகசிய அறைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ.98 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 137 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

இது தொடர்பாக முகமது இம்ரானை கைது செய்து துபாயில் இருந்து மும்பைக்கு வந்து பின்னர் உள்நாட்டு பயணியாக வந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பவானி அருகே மது போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது

Web Editor

இபிஎஸ்-க்கு அதிகரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு!

Web Editor

பொன் விழா கண்ட தமிழ்நாடு மகளிர் போலீஸ் பிரிவு!

Web Editor