29.5 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு

ஜம்மு&காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு&காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் மற்றும் ஜம்மு&காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக இந்த மாதத்தில் மட்டும் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதில், காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் முக்கிய உறுப்பினரும், ஸ்ரீநகரில் ஒரு மருந்தகத்தின் உரிமையாளருமான மகான் லால் பிந்த்ரூ, டாக்ஸி டிரைவர் முகமது ஷாஃபி லோன், ஆசிரியர்கள் தீபக் சந்த் மற்றும் சுப்புந்தர் கவுர் மற்றும் உணவு விற்பனையாளர் வீரேந்தர் பாஸ்வான் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

முன்னதாக ஜம்மு&காஷ்மீர் முழுவதும் 900பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading