மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு உயர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.050 அடியாகவும், நீர் இருப்பு 93.5559 டி.எம்.சியாகவும் இருந்தது. அணைக்கான நீர்வரத்து 1,44,000 கன அடியாகவும் இருந்ததால், அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும், கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அண்மைச் செய்தி: ‘‘ஆளுநரின் போக்கு கவலை அளிக்கிறது’ – எம்.பி. தொல். திருமாவளவன்’
இந்நிலையில், காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.000 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சியாகவும் உள்ளதால், அணைக்கான நீர்வரத்து 1,40,000 கன அடியாகவும் உள்ளது. இதனால், அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றது.








