ஸ்டார்டப் நிறுவனங்களை குறிவைத்து நடக்கும் சைபர் தாக்குதல்!

இந்தியா தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் ஹேக்கர்களும் கைவரிசை காட்டி வருகின்றனர். குறிப்பாக ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. சிறு, குறு தொழில்கள் இந்த தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தினமும்…

இந்தியா தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் ஹேக்கர்களும் கைவரிசை காட்டி வருகின்றனர். குறிப்பாக ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. சிறு, குறு தொழில்கள் இந்த தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தினமும் 4 லட்சம் மால்வேர் மற்றும் 375 சைபர் தாக்குதல் கண்டுபிடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. WhiteHat Jr, Big Basket, Dunzo ஆகிய நிறுவனங்கள் இந்த தாக்குதல் தொடர்பாக புகாரளித்துள்ளன.

WhiteHat Jr:

இந்நிறுவனம் சேமித்து வைத்துள்ள 2.8 லட்சம் மாணவர்களின் தரவுகள் ஆபத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து 24 மணி நேரத்தில் அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்தது.

BigBasket:

பிரபல ஆன்லைன் மளிகைப் பொருட்கள் ஷாப்பிங் தளமான BigBasket-லும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சுமார் 20 மில்லியன் பயனர்களின் தரவுகளுக்கு அச்சுறுத்தல் எழுந்தது. இதனை அந்நிறுவனமும் உறுதி செய்திருந்தது. இதனை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது.

Dunzo:

கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனத்தில் உள்ள 3.4 மில்லியன் பயனர்களின் தரவுகள் சைபர் தாக்குதலால் கசிந்ததாக தெரிவிக்கப்பட்டது. மொபைல் எண், இ-மெயில் ஐடி உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே அதில் இருந்ததாகவும், வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Unacademy:


சுமார் 22 மில்லியன் பயனர்களின் தரவுகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 11 மில்லியன் பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பயனர்களின் தரவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply