வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்! – லாரி உரிமையாளர்கள் சங்கம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையடுத்த திருவேற்காடு அயனம்பாக்கத்தில், லாரி உரிமையாளர் சங்க…

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையடுத்த திருவேற்காடு அயனம்பாக்கத்தில், லாரி உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் குமாரசாமி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர்கள் குறித்து உயர்நீதிமன்றம் அறிவித்த உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply