சங்கரன்கோவில் கோமதி யானை நாளை புத்துணர்வு முகாம் செல்ல இருந்த நிலையில் யானைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள கோமதி யானை நாளை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டிக்கு புத்துணர்வு முகாமுக்கு செல்ல உள்ள நிலையில் யானைக்கு கால்நடை மருத்துவர் ரகமத்துல்லா கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திருகோவில் யானைகளுக்கு ஆண்டு தோறும் புத்துணர்வு முகாமிற்கு யானைகளை கொண்டு செல்வது வழக்கம் அதன் காரணமாக சங்கரன்கோவில் கோமதி யானைக்கு கொரோனா மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.