பணி ஆணை வழங்க ரூ.5,000 லஞ்சம்: மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கைது!

திருப்பூரில் பணி வரன்முறை ஆணை வழங்க 5000 லஞ்சம் பெற்றதாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி;  இவர் திருப்பூர் காதர் பேட்டை…

திருப்பூரில் பணி வரன்முறை ஆணை வழங்க 5000 லஞ்சம் பெற்றதாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி;  இவர் திருப்பூர் காதர் பேட்டை பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2006ம் ஆண்டு அங்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து 2016ம் ஆண்டு ஈரோடு நம்பியூர் ஒன்றிய கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்
பணியாற்றியதற்கான பணி வரன்முறை ஆணை பெற வேண்டி திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு விண்ணப்பத்திருந்தார். இந்த பணி வரன்முறை ஆணையை வழங்க வேண்டும் என்றால் ரூ5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஸ்ரீதேவி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை போலீசார் ஸ்ரீதேவியிடம்  கொடுத்துள்ளனர். இன்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்த ஸ்ரீதேவி அமுதாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த லஞ்ச ஒழிப்புபோலீசார் அமுதாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.