
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை 4 வது முறையாக 100 அடியை எட்டியது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகவும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 250 கன அடியாகவும் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நான்காவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,111 கனஅடியாகவும், நீர் இருப்பு 64.84 டி.எம்.சி,யாக உள்ளது. அணை 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







