தமிழகத்தில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்த 7 அம்ச திட்டங்கள்; மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தகவல்!

தமிழகத்தில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்த 7 அம்ச திட்டங்களை வகுத்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

தமிழகத்தில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்த 7 அம்ச திட்டங்களை வகுத்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் பி டீம் என கூறுவது தங்களை அவமானப்படுத்துவது போல் இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் 2வது சுதந்திர போராட்டம் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்த கமல்ஹாசன், தமிழகத்தில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்த 7 அம்ச திட்டங்களை வகுத்துள்ளதாக குறிப்பிட்டார். பல கட்சிகளில் சிக்கி உள்ள நேர்மையான நபர்களை வரவேற்பதாகவும், தங்களது அரசு மக்களை தேடிச்சென்று சேவை செய்யும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply