திட்டமிட்டபடி வேல் யாத்திரை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை முருகன் ஆலயத்தில் பாஜகவின் மாநில தலைவர் முருகன் மற்றும் எச்.ராஜா உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், திருப்பரங்குன்றம் பழமுதிர்சோலையில் இன்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அதைத்தொடர்ந்து, 7ம் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெறும் என்றும், இந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் கலந்து கொள்வதாகவும் முருகன் தெரிவித்துள்ளார்.