சென்னை அருகே அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த காப்பகம்… 9 சிறுவர்,சிறுமிகள் மீட்பு!

சென்னை அருகே அனுமதியின்றி நடத்தி வந்த காப்பகத்தில் இருந்து 9 சிறுவர்,சிறுமிகள் மீட்கப்பட்டனர். சென்னை சோழிங்கநல்லூர் ஓ எம் ஆர் சாலையில் சீன் டக்ளஸ் லூயிஸ் நினைவு நம்பிக்கை என்கிற அறக்கட்டளை இயங்கி வந்தது.…

சென்னை அருகே அனுமதியின்றி நடத்தி வந்த காப்பகத்தில் இருந்து 9 சிறுவர்,சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

சென்னை சோழிங்கநல்லூர் ஓ எம் ஆர் சாலையில் சீன் டக்ளஸ் லூயிஸ் நினைவு நம்பிக்கை என்கிற அறக்கட்டளை இயங்கி வந்தது. இந்த அறக்கட்டளை முறையாக இயங்கவில்லை எனவும் இங்குள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதி இல்லை எனவும் கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிறுவர் நல காவல் பிரிவு போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், மேரி எனும் மூதாட்டி உரிய அனுமதி இல்லாமல் காப்பகம் நடத்தி வந்ததாகவும், இந்த காப்பகத்தில் இருந்து 4 சிறுமிகள், 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply