32.4 C
Chennai
May 13, 2024
தமிழகம் செய்திகள்

சென்னையில் 5-வது நாளாக ஆசிரியர்கள் தொடர் போராட்டம்!

சென்னை டி பி ஐ வளாகத்தில் ஆசிரியர்கள் தகுதி பெற்றவர்கள் 5 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கங்கள் ஒன்றிணைந்து 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 2018ல் நியமனத் தேர்வு எழுத அறிவித்ததை எதிர்த்து போட்டித் தேர்வு இன்றி பணி வழங்கவும், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை 57 வயதாக உயர்த்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் தேர்வில் தகுதி அடைந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள காரணத்தால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

பெண்கள் குளிப்பதற்கு கூட சரியான இடம் இல்லாததால் பெரிதும் அவதிப்படுவதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர். அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடி வருவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்காததால் காலவரையற்ற சாகும்வரை
உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading