கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி!

கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தபல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுப்பாடுகள்: ➤ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில்மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டுநிகழ்ச்சி நடத்த தமிழக…

கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கட்டுப்பாடுகள்:

➤ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில்
மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு
நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி.

➤ மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

➤ எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து
கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி.

➤ திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50% அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி.

➤ பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதி!

➤ நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும்
அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித
இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply