கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, தற்போது நடைபெற்று வருகிறது.
தேர்தலின்பாது, இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு 8 ம் தேதியும, 2-ம் கட்ட வாக்குப்பதிவு 10ம் தேதியும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு 14ம் தேதியும் நடைபெற்றது. 14 மாவட்டங்களில் மொத்தமாக 76.04 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநிலத்தில் உள்ள 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணியும் அதன் பிறகு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் நடந்து வருகின்றன. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள் ,152 ஊராட்சி ஒன்றியங்கள், 941 கிராம பஞ்சாயத்துகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று மாலைக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.