அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய வம்சாவளி மாணவி பலி: உரிய விசாரணைக்கு இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவி ஜாஹ்னவி கந்துலா மரணம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என இந்திய துணை தூதரகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சியாட்டில்…

அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவி ஜாஹ்னவி கந்துலா மரணம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என இந்திய துணை தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளி மாணவி ஜாஹ்னவி கந்துலா போலீஸ் வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர், கேலி செய்து சிரிக்கும் வீடியோ வெளியானது. ஜாஹ்னவி கந்துலாவின் மரணத்தைக் கையாளும் ஊடகங்கள் உட்பட சமீபத்திய செய்திகள் ஆழ்ந்த கவலையளிப்பதாக சான்பிரான்ஸிஸ்கோ இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.