குட்டிகளுடன் கூட்டமாக இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர் பகுதிக்கு குட்டிகளுடன் கூட்டமாக இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா மாநிலத்திலிருந்து கூடலூர் அருகே உள்ள அத்திகுணா உள்ளிட்ட பல்வேறு வனப் பகுதிகளுக்கு யானைகள் கூட்டம் தற்போது இடம்பெயர்ந்து வருகிறது. இதனால் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிப்போர் அச்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







