தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள்
பங்கேற்க முடியாமல் போனது தகவல் பரிமாற்ற குழப்பத்தால் நடந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரை அண்ணா சதுக்க பேருந்து நிலையத்திலிருந்து
சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்ட
நாட்களாக பேருந்து நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில், மழை காலங்களில்
பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர். பேருந்துகள் நின்று செல்வதற்கு இடம் மட்டுமே இருந்த நிலையில். நிழற் குடையுடன் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அண்ணா சதுக்க பேருந்து நிலையத்துக்கு அருகில் காலியாக இருந்த
இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்து கடந்த இரண்டு
மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்த
நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்தது.மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.20 கோடியில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து
நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. அதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“ரூ.1.20 கோடியில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்படவுள்ளது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள்
பங்கேற்காதது குறித்த கேள்விக்கு, தீவிர விசாரணை செய்த பின் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது.
காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அதன் பின் நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர்.
மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.