டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்காதது ஏன் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தநிலையில், இன்றைய கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக எம் எல் ஏ ராஜன் செல்லப்பா, “பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போல டீசல் விலையும் குறைப்பதில் அரசு கவனம் செலுத்தி இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதில் அளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “டீசல் விலை குறைப்பு பயன் மக்களுக்கு நேரடியாக கிடைக்குமா என்று சொல்லமுடியாது. ஆனால், பெட்ரோல் விலை குறைப்பினால் சுமார் 2 கோடி பேர் நேரடியாக பயன்பெறுகின்றனர். மேலும், டீசல் விலையை குறைக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், விரைவில் டீசல் அதிகம் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து துறை, மீனவர்களுக்கும் கூடுதலாக டீசல் மானியம் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.