வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன்…

வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார்.

கங்குவா படப்பிடிப்பை தொடர்ந்து எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி,  வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா நடிப்பில்,  வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.  முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.

கங்குவா படத்திற்கு பின் சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வாடிவாசல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும் விடுதலை 2 படப்பிடிப்பை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை அவர் துவங்குவார் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையே வாடிவாசல் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் படமும் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டன. இதற்கு மறுப்பு தெரிவித்த படக்குழு விடுதலை 2க்கு பின் வாடிவாசல் பணிகள் தொடரும் என தெரிவித்தது.

இந்த நிலையில்,  வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.