இஸ்ரோவின் சந்திராயன் 3 விண்கலம் நாளை மறுநாள் ஏவப்பட உள்ள நிலையில், அதன் சிறப்புகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…..
- சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மூன்றாவது முறையாக தனது பயணத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. புதிய சோதனை, புதிய முயற்சி, புதிய தொழில்நுட்பம் என முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சந்திரயான் 3 திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
- புதிய சோதனையின் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதே சந்திரயான் 3-ன் பிரதான பணியாகும்.
- கடந்த 2019 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து அதிநவீன வசதிகளுடன் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய கலன்களை உள்ளடக்கியதாக சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டுள்ளது.
- துல்லிய வடிவமைப்பாலும், மாறுபட்ட வடிவத்திலும் லேண்டர் மற்றும் ரோவர் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- 1752 கிலோ எடை கொண்ட லேண்டர், 2148 கிலோ உந்துவிசை செயல்திறன் என மொத்தம் 3900 கிலோ எடை கொண்டது.
- நிலவின் மேற்பரப்பில் லேண்டரை பாதுகாப்பாக மற்றும் மென்மையாக தரையிறக்குவது சந்திராயன் 3-ன் முக்கிய பணியாக கூறப்படுகிறது.
- அதோடு ரோவர் சுற்றுவதை உறுதி செய்வது அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் சந்திராயன் 3-ன் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்வெளி உலகமே வியக்கும் சந்திராயன் 3 திட்டம் 615 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.






