வார இறுதி நாட்களையொட்டி, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வார இறுதி நாள்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அது போல, சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பவும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.