தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் திருமாவளவன் பிறந்தநாள் விழா தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு குறும்படங்கள், அனிமேஷன் படங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவை வரவேற்கப்படுவதாகவும் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் விழாக்குழுவினர் கூறினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: பிஜிஆர் நிறுவன விவகாரம் – ஆளுநரை சந்திக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை சுட்டிக்காட்டி, பிற்போக்கு சக்திகள் திரைத்துறையை கைப்பற்றி வருவதாக தெரிவித்தார். உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் சமூக நீதியை வளர்த்தெடுக்கும் திட்டமாக இருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், இந்திய சமூகம் சமனற்று இன, மொழி, சாதி, மத, பாலின பாகுபாட்டுடன் உள்ளது, இந்த பாகுபாடுகள் கலைந்து சகோதரத்துவம் வளர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மண்ணில் பிற்போக்கு சக்திகள் தலைதூக்க பார்க்கிறது. அதை நடைபெற விடமாட்டோம், இது சமூக நீதி மண் என்பதை நிலை நிறுத்துவோம் என பட்ஜெட் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவித்துள்ளார் என கூறிய அவர், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.