ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது பெண் தோழி மற்றும் குழந்தையுடன் பிரமாண்ட அரண்மனையில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் சாம்பியனும், உடற்பயிற்சியாளருமான அலினா கபேவா (39வயது) என்பவருடன் புதின் நீண்டகாலமாக நட்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் மாஸ்கோவில் இருந்து வடமேற்கில் உள்ள லேக் வால்டாய் என்னும் இடத்தில் தான் இவர்களுக்கான பிரமாண்ட அரண்மனை உள்ளதாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு சுமார் 120 மில்லியன் டாலர் மதிப்பில் புதின் ஒரு சொத்தை வாங்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: அதானி விவகாரம்: நிபுணர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
2020-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி, தொடர்ந்து இரண்டாண்டுகள் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 13,000 சதுர அடிக்கு ரஷ்ய டச்சா எனப்படும் முழுக்க முழுக்க மரத்தினலான கலை வடிவத்தில் அரண்மனை கட்டப்பட்டுள்ளது. அங்கு அலினாவின் குழந்தை மற்றும் உறவினர்களை சிலர் கண்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்ணாடி மேஜையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தங்க நாற்காலிகள், அரண்மனை கூரையில் தொங்கும் தங்க இலைகள் திரும்பிய பக்கமெல்லாம் பிரமாண்டம் நிறைந்திருக்கிறதாம்.
இந்த அரண்மனை குறித்து 2021ம் ஆண்டு முதலே சர்ச்சைகள் எழத்தொடங்கின. நாட்டுக்கான பட்ஜெட் நிதியில் இருந்து எடுத்து அரண்மனை கட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.
-ம.பவித்ரா