சாந்திநிகேதனில் முறைகேடாக வைத்துள்ள நிலங்களை ஒப்படைக்க கோரி நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடிதம்அனுப்பியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் அமர்தியா சென்னுக்கு அனுப்பப்படும் இரண்டாவது கடிதம் ஆகும்.
நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், அமர்த்தியா சென்னுக்கு சொந்தமான 1.38 ஏக்கரில் சட்ட உரிமையுள்ள நிலங்களை தவிர கூடுதலாக நிலங்களை உடனடியாக திருப்பி தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலத்தை அளக்க சர்வேயர் மற்றும் வழக்கறிஞர்களை பல்கலைக்கழக தரப்பிலிருந்து அனுப்ப தயாராகா இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமர்த்திய சென் இதுபற்றி கூறும்போது, பிர்பஹ்ம் மாவட்டத்தின் சாந்தி நிகேதனில் நான் வைத்துள்ள நிலங்கள் அனைத்தும் என் அப்பாவால் வாங்கப்பட்டது. சில நிலங்கள் குத்தைக்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், திடீரென பல்கலைக்கழகம் இந்த விஷயத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பது ஏன்? என்னை இந்த இடத்திலிருந்து வெளியேற்ற முயற்சி நடக்கிறது. என்னுடைய வழக்கறிஞர்கள் இதற்கு பதிலளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்க அரசு அதிகாரி இந்த விவகாரம் பற்றி கூறுகையில், “அரசு இதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. அரசின் மூத்த அதிகாரிகளோடு இது குறித்து விவாதித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.