வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு; ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும்…

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவை விதி 235-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு 3 பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், சீர்மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டின்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் முறை மாற்றி அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதங்களுக்குப் பின்னர் இந்த விகிதம் மாற்றி அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.