உர்வில் பட்டேல், பிரெவிஸ் அதிரடி… கம்பேக் கொடுத்த சென்னை – நெருக்கடியில் கொல்கத்தா!

கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி…

நடப்பு ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 179 ரன்கள் அடித்தனர். இதன்மூலம் சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து 181 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை பவர்பிளேயின் முடிவிலேயே 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து பிரெவிஸ், சிவம் துபே மிடில் ஆர்டர்களை கொண்டு செல்ல, 52 ரன்களில் பிரெவிஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிவம் துபே 45 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நூர் அஹமதும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கம்போஜ் 3 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார். இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்றது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா 3 விக்கெட்டுகளும், ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.