கேரளாவில் கார் மீது லாரி மோதி விபத்து – சிறுவன் உட்பட 5 பேர் பலி! 

கேரளாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.   கேரள மாநிலம் புன்னச்சேரி அருகே நேற்று இரவு சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில்…

கேரளாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.  

கேரள மாநிலம் புன்னச்சேரி அருகே நேற்று இரவு சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற காசர்கோடு காலிச்சநடுக்கம் சாஸ்தம்பாறையைச் சேர்ந்த கே.என்.பத்மகுமார் (59),  பீமநதியைச் சேர்ந்த சூரிக்காட் சுதாகரன் (52), சுதாகரன் மனைவி அஜிதா(35),  அஜிதாவின் தந்தை கொழுமாள் கிருஷ்ணன் (65) ஆகிய 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அஜிதாவின் தம்பி மகன் ஆகாஷ் (9) என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், காரின் பின்னால் வந்த லாரி காரின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.  லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த விபத்து தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.