ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இது விபத்தாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலே இதற்குக் காரணம் என்று ராணுவம் உறுதி செய்து தெரிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி அருகே இந்திய ராணுவ வாகனத்தில் வீரர்கள் பிம்பர் காலி பகுதியில் இருந்து சங்கியோடிக்கொண்டு சென்றுகொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Terrible news coming in, of this Indian Army truck that caught fire in Jammu & Kashmir, and resulted in the death of five of our bravest, was the work of terrorists. One jawan has been seriously injured and is battling for life. The entire nation prays for him. pic.twitter.com/BHQcj038ua
— Anand Ranganathan (@ARanganathan72) April 20, 2023
இது தொடர்பாக ராணுவத்தின் வடக்கு கட்டளைப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று பிற்பகல் 3 மணியளவில் ரஜெளரி செக்டாரில் பிம்பர் காலி மற்றும் பூஞ்ச் இடையே சென்று கொண்டிருந்த ராணுவ டிரக் ஒன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுடப்பட்டது. பலத்த கனமழை மற்றும் குறைவாக தென்படும் பாதை சூழலை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். வாகனம் பற்றி எரிய, தீவிரவாதள் கையெறி குண்டுகள் பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.