தொடர் விடுமுறையையொட்டி உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோடை காலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிகின்றனர்.
உதகை அரசு தாவரவியல் பூங்கா, 100 ஆண்டுகள் கடந்ததை நினைவாக கொண்டு உதகையில் நூற்றாண்டு ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாகவும், கோடை காலம் காரணமாகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவிற்கு வருகை புரிந்தனர். மேலும், பூங்காவிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை கவர, 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ரோஜா செடிகள் சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும்
ஊதா என பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் வண்ண ரோஜா மலர்களை,
பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும், புகைப்படம்
எடுத்து விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
—கு.பாலமுருகன்