10 ம் வகுப்பு மதிப்பெண்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதால் CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேருவதற்கு CUET தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது 10-ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த ஆண்டு 12-ம் வகுப்பு எழுதவுள்ளனர். 2021ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.
தற்போது CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என்பதால் விண்ணப்பிப்பதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்த விதிமுறையில் தளர்வளித்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 9-ம் தொடங்கியது. மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21ம் தேதி முதல் CUET தேர்வு நடைபெறவுள்ளது.