அதிமுகவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டையே சீரழித்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. துரிதமாக செயல்பட்டு தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மழை வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து காணொலி வாயிலாக கேட்டறிந்தார். மேலும், நீர் நிலைகளின் நீர் இருப்பு விவரம் மையத்திற்கு வரும் அழைப்புகள் குறித்து அறிந்துகொண்டார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “அதிமுகவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தையே சீரழித்துள்ளனர். அதனை எல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் பல வருடங்கள் ஆகும். ஆனால், நாங்கள் ஒன்றரை வருடங்களுக்குள்ளேயே முடித்துவிடுவோம் என நம்பிக்கை உள்ளது” என்று விவரித்தார்.