100 ஆண்டுகளுக்கு முன்னால் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சென்ற சுற்றுலா நீர் மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ‘ஆம்எம்எஸ் டைட்டானிக் கப்பல்’ தனது முதல் பயணத்தின் போதே கடலில் மூழ்கியது மனித குலம் மறக்க முடியாத மிகப் பெரிய துயர நிகழ்வாகும்.
1912 ஆம் ஆண்டு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியதில் அந்த கப்பல் மூன்று மணி நேரங்களில் முற்றாக மூழ்கியது. அதில் அதில் பயணம் செய்த ஆயிரத்து 503 பேரும் உயிரிழந்தது உலகின் மிகப் பெரிய கடல் அழிவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஆராய சென்ற நீர் மூழ்கி கப்பல் தற்போது மாயமாகியுள்ளது. போலார் பிரின்ஸ் என்ற கனடிய ஆராய்ச்சிக் கப்பலில் இருந்து 21 அடி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அதன் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை டைடானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் டைவ் செய்யத் தொடங்கினர். ஆனால் ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்குப் பிறகு கப்பலுடனான தொடர்பை ஆய்வு குழுவினர் இழந்தார்.
இந்தக் கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கப்பலுக்குள் 96 மணி நேரத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பதாகவும், கப்பலை அடையும் பணிகள் துரிதகதியில் நடப்பதாகவும் கூறப்படுகிறது.







