மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, ” மணிப்பூர் வீடியோ சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது. எனது இதயம் கனத்துள்ளது. மணிப்பூர் மகளுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது. எந்தவொரு நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த மாநில முதல்வர்களை வலியுறுத்துகிறேன்” என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.